என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரியின் குறுக்கே கர்நாடகா எங்கு அணை கட்டினாலும் அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Byமாலை மலர்11 Dec 2018 7:33 AM GMT (Updated: 11 Dec 2018 7:33 AM GMT)
மேகதாது மட்டுமல்ல காவிரியின் குறுக்கே கர்நாடகா எங்கு அணை கட்டினாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
கோவில்பட்டி:
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவது நடந்து வருகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதை ஏற்று அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்க பயந்து கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.
2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வந்தால் அது குறித்து தலைமை முடிவு செய்யும். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் சரத்துகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற 4 மாநிலங்களிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்.
மேகதாது மட்டுமல்ல மற்ற எந்த இடத்தில் அணை கட்டினாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்தப் பணியை தடுத்து நிறுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ள டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முதல்வர் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவது நடந்து வருகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதை ஏற்று அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்க பயந்து கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.
2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வந்தால் அது குறித்து தலைமை முடிவு செய்யும். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் சரத்துகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற 4 மாநிலங்களிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்.
மேகதாது மட்டுமல்ல மற்ற எந்த இடத்தில் அணை கட்டினாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்தப் பணியை தடுத்து நிறுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ள டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முதல்வர் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X