என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்5 Dec 2018 6:30 AM GMT (Updated: 5 Dec 2018 6:30 AM GMT)
சென்னை ஐஐடி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide
சென்னை:
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் அதிதி சின்னா (45).
கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு அதிதி சின்னா திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கினார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிதி சின்னா பரிதாபமாக இறந்தார்.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. குடும்பத்தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேலை பார்த்த இடத்தில் ஏதாவது பிரச்சினை இருந்ததா? என்று பல்வேறு கோணத்தில் கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Suicide
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X