என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரங்கள் கஜா புயலால் சாய்ந்தன - மனவேதனையில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்4 Dec 2018 7:48 AM GMT (Updated: 4 Dec 2018 7:48 AM GMT)
புதுக்கோட்டை அருகே திருமணத்திற்காக வளர்த்த மரங்கள் கஜா புயலால் சாய்ந்த மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #WomanSuicide
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தமிழரசி (வயது 24).
அண்ணாத்துரைக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக தமிழரசியும் விவசாய பணியில் ஈடுபட்டு வந் தார். மரங்களை வளர்த்து அதன் மூலம் அண்ணாத்துரை தனது மகன், மகள்களின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் கஜா புயலிபோது அண்ணாதுரை விவசாய தோட்டத்தில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நீண்ட நாட்களாக பாதுகாப்பாக வளர்த்த மரங்கள் சாய்ந்ததால் அண்ணாத்துரை, தமிழரசி இருவரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
மேலும் அண்ணாத்துரை, தமிழரசிக்கு திருமண செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். திருமண செலவுக்கு அவர் வளர்த்து வந்த மரங்களையே நம்பியிருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தமிழரசி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால் புயலில் மரங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.
நேற்று அண்ணாத்துரையும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழரசி திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.
பின்னர் உடலில் பற்றிய தீயை அணைத்து தமிழரசியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார்.
பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த மரங்கள் கஜா புயலால் சேதமானதால் மன வேதனையடைந்து தமிழரசி தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால் மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் மனவேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #WomanSuicide
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தமிழரசி (வயது 24).
அண்ணாத்துரைக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக தமிழரசியும் விவசாய பணியில் ஈடுபட்டு வந் தார். மரங்களை வளர்த்து அதன் மூலம் அண்ணாத்துரை தனது மகன், மகள்களின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் கஜா புயலிபோது அண்ணாதுரை விவசாய தோட்டத்தில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நீண்ட நாட்களாக பாதுகாப்பாக வளர்த்த மரங்கள் சாய்ந்ததால் அண்ணாத்துரை, தமிழரசி இருவரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
மேலும் அண்ணாத்துரை, தமிழரசிக்கு திருமண செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். திருமண செலவுக்கு அவர் வளர்த்து வந்த மரங்களையே நம்பியிருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தமிழரசி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால் புயலில் மரங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.
நேற்று அண்ணாத்துரையும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழரசி திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.
பின்னர் உடலில் பற்றிய தீயை அணைத்து தமிழரசியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார்.
பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த மரங்கள் கஜா புயலால் சேதமானதால் மன வேதனையடைந்து தமிழரசி தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால் மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் மனவேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #WomanSuicide
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X