என் மலர்
செய்திகள்

கம்பம் அருகே பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
கம்பம் அருகே பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த பிரகாஷ் மகள் அமுதா (வயது37). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கும், அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
ஜெயக்குமார் அடிக்கடி குடித்து விட்டு அமுதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஜெயக்குமார் தகாதார வார்த்தைகளால் திட்டி அமுதாவை தாக்கி உள்ளார்.
இது குறித்து அமுதா கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






