search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்- கடம்பூர் ராஜு தொகுதி மாற்றம்
    X

    அ.தி.மு.க.வில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்- கடம்பூர் ராஜு தொகுதி மாற்றம்

    விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerselvam #KadambuRaju
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    1. அரவக்குறிச்சி தொகுதி- தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

    2. திருவாரூர் தொகுதி- ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்), ஆசைமணி (முன்னாள் எம்.எல்.ஏ.)

    3. பாப்பிரெட்டிபட்டி- செ.ம.வேலுசாமி (கொள்கை பரப்பு துணை செயலாளர்), ப.மோகன் (அமைப்பு செயலாளர்)

    4. திருப்போரூர்- நீலாங்கரை முனுசாமி (மீனவர் பிரிவு செயலாளர்), கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர்)

    மானாமதுரை தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொகுதி மாற்றப்பட்டு பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். பி.சண்முகநாதன் ஒட்டப் பிடாரம் தொகுதிக்கு பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Edappadipalaniswami #OPanneerselvam #KadamburRaju
    Next Story
    ×