என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 தொகுதிகளிலும் வெற்றி பெற வியூகம் அமைத்து இருக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்4 Nov 2018 3:18 AM GMT (Updated: 4 Nov 2018 3:18 AM GMT)
20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran
சென்னை:
அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள். அதைபோல் எந்த இயக்கம் அவர்களை (டி.டி.வி. தினகரன்) அடையாளம் காட்டியதோ? எந்த இயக்கத்தால் உண்டு, கொழுத்து வளர்ந்தார்களோ?. அவர்கள் தான் இந்த இயக்கத்தை (அ.தி.மு.க.) அழித்து விடலாம் என்று, செயல்பட்டு இன்றைக்கு அழிந்து போய் இருக்கிறார்கள். இந்த தீபாவளி எங்களுக்கு நல்ல தீபாவளி.
தமிழகத்தில் மருத்துவ அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். எங்கள் ஆட்சியில் 14 ஆயிரத்து 216 பேர் தான் பாதிக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் தான் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை மறைத்து திரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் பாதிப்பு இருந்தது.
எப்போது வேண்டுமானலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். எங்களை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களாக இருக்கிறோம். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
எங்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டி.டி.வி. தினகரன் கூறுவது என்பது, குப்புற விழுந்தும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல. எங்களை பொறுத்தவரையில் ஒற்றுமையுடன் எதிரிகளை தகர்த்து எறிந்து வெற்றியை பெறுவோம். வேட்பாளர்களை ஆட்சி மன்ற தேர்தல் குழு முடிவு செய்யும்.
20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம். அதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.வி. தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் திரும்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran
அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள். அதைபோல் எந்த இயக்கம் அவர்களை (டி.டி.வி. தினகரன்) அடையாளம் காட்டியதோ? எந்த இயக்கத்தால் உண்டு, கொழுத்து வளர்ந்தார்களோ?. அவர்கள் தான் இந்த இயக்கத்தை (அ.தி.மு.க.) அழித்து விடலாம் என்று, செயல்பட்டு இன்றைக்கு அழிந்து போய் இருக்கிறார்கள். இந்த தீபாவளி எங்களுக்கு நல்ல தீபாவளி.
தமிழகத்தில் மருத்துவ அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். எங்கள் ஆட்சியில் 14 ஆயிரத்து 216 பேர் தான் பாதிக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் தான் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை மறைத்து திரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் பாதிப்பு இருந்தது.
எப்போது வேண்டுமானலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். எங்களை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களாக இருக்கிறோம். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
எங்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டி.டி.வி. தினகரன் கூறுவது என்பது, குப்புற விழுந்தும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல. எங்களை பொறுத்தவரையில் ஒற்றுமையுடன் எதிரிகளை தகர்த்து எறிந்து வெற்றியை பெறுவோம். வேட்பாளர்களை ஆட்சி மன்ற தேர்தல் குழு முடிவு செய்யும்.
20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம். அதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.வி. தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் திரும்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X