என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி மீது கார் மோதல்- 3 வாலிபர்கள் பலி
காஞ்சீபுரம்:
சென்னை மண்ணடி கோதல் மெர்சாட் தெருவை சேர்ந்த ஜாவித், பைசல், ரைஸ் ஆகியோர் தங்களது உறவினர்கள் 6 பேருடன் இன்று அதிகாலை காரில் ஏலகிரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை பைசல் ஓட்டிச் சென்றார்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே சின்னப்பன்சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதனால் கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்து சென்றது.
அப்போது எதிரே வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆசிப், யாகூப், இம்தியாஸ், முகமது யாசிப், இன்ஷார் இர்பான், இன்ஷா ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த 6 வாலிபர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்