search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் போர்க்களமாக மாறும்- முத்தரசன்
    X

    தமிழகம் போர்க்களமாக மாறும்- முத்தரசன்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #HydroCarbonProject #Mutharasan
    விழுப்புரம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விழுப்புரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்த நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகமே போர்க்களமாக மாறும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும். ஒவ்வொரு ஆறுகளையும் இணைக்கும் முன்பு அந்தந்த பகுதிகளில் அணைகள் கட்ட வேண்டும்.

    பழைய அணைக்கட்டுகள் அனைத்தையும் மழை காலத்துக்கு முன்பு தூர் வார வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HydroCarbonProject #Mutharasan
    Next Story
    ×