search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை
    X

    கோபி அருகே திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை

    திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

    எனவே வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது லட்சுமியும், குணசேகரனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து பிணங்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது குணசேகரனுக்கு திருமணம் ஆகாததால் தாயும், மகனும் விரக்தியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×