search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.
    X
    பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.

    முதலமைச்சராவதற்கு அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்- ராமதாஸ் பேச்சு

    ஓட்டு என்னும் ஆயுதத்தை ஒருமுறை உபயோகித்து அன்புமணி ராமதாசை முதல் -அமைச்சராக்குங்கள் என்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss
    வாலாஜா:

    பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் நடந்தது.

    தமிழகத்தில் பா.ம.க.வின் கோட்டையாக மாறியுள்ளது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் மண் வளத்தையும், நீர் வளத்தையும் கெடுத்தவர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தான்.

    இந்தியாவில் 50 மாவட்டங்கள் கருப்பு மாவட்டங்கள் என கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் மண் வளம் கெட்டுவிட்டது.

    பல போராட்டங்கள் நடத்தியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கல்வியில் 3-வது இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் இன்றைக்கு கடைசி மாவட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம் தி.மு.க., அ.தி.மு.க. தான்.

    கல்வியை தனியார் கையில் கொடுத்து விட்டு, சாராயத்தை விற்கும் வேலையை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் கொடுக்காமல் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள்.

    என் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதை எல்லோரும் பிரசாரமாக எடுத்துச்செல்ல வேண்டும். மனிதகுலத்தை உருவாக்கும் சக்தி பெண்களுக்கு உள்ளது, காக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் பெண்களிடம் உள்ளது. பெண்களிடத்தில் விலை மதிக்க முடியாத ஓட்டு எனும் ஆயுதமும் உள்ளது.

    அதை ஒருமுறை உபயோகித்து டாக்டர் அன்புமணி ராமதாசை முதல் -அமைச்சராக்குங்கள். இலவச கல்வி, மது ஒழிப்பு, ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை ஒரே விதமான உயர்தர மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரக்கூடிய திட்டங்களை அன்புமணி நிறைவேற்றுவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss
    Next Story
    ×