search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர் விமானம் வாங்கியதில் முறைகேடு- மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    போர் விமானம் வாங்கியதில் முறைகேடு- மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.

    பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.

    திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.

    திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி

    நாமக்கல்-எச்.வசந்த குமார்

    திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    சிவகங்கை-ப.சிதம்பரம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
    Next Story
    ×