என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கேரளாவில் கனமழை எதிரொலி - மதுரை வழியாக திருப்பி விடப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்கள்
By
மாலை மலர்17 Aug 2018 10:28 AM GMT (Updated: 17 Aug 2018 10:28 AM GMT)

கேரளாவில் கனமழை எதிரொலியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. #KeralaRain #KeralaFloods
மதுரை:
மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் குழித்துறை- இரணியல் பிரிவில் நிலச்சரிவையொட்டி, அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி புதுடெல்லியில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12626) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15-ந்தேதி புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17230) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து நேற்று (16-ந்தேதி) புறப்பட்ட ஐலண்ட் எக்ஸ் பிரஸ் திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, பெங்களூரு செல்லும்.
ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா பகுதியில் இருந்து புறப்பட்ட ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16318) ஈரோடு, திருச்சி, விருதுநகர், மதுரை, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.
செங்கோட்டை- கொல்லம் பிரிவில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16343) போக்குவரத்தில் சோரனூர்- மதுரை இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-புனலூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையேயான சேவை இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கொச்சுவேலி-திருவனந்தபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) 80 நிமிடங்கள் கால தாமதமாக செல்லும்.
எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16130) தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
திருவனந்தபுரம்-பாலக்காடு பிரிவில் மண் சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16315) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.
இதேபோல புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 12626), கொர்பா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22647), திருவனந்தபுரம்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12625), கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஆகியவை ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaRain #KeralaFloods
மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் குழித்துறை- இரணியல் பிரிவில் நிலச்சரிவையொட்டி, அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி புதுடெல்லியில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12626) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15-ந்தேதி புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17230) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து நேற்று (16-ந்தேதி) புறப்பட்ட ஐலண்ட் எக்ஸ் பிரஸ் திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, பெங்களூரு செல்லும்.
ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா பகுதியில் இருந்து புறப்பட்ட ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16318) ஈரோடு, திருச்சி, விருதுநகர், மதுரை, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.
செங்கோட்டை- கொல்லம் பிரிவில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16343) போக்குவரத்தில் சோரனூர்- மதுரை இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-புனலூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையேயான சேவை இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கொச்சுவேலி-திருவனந்தபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) 80 நிமிடங்கள் கால தாமதமாக செல்லும்.
எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16130) தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
திருவனந்தபுரம்-பாலக்காடு பிரிவில் மண் சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16315) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.
மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.
இதேபோல புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 12626), கொர்பா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22647), திருவனந்தபுரம்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12625), கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஆகியவை ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaRain #KeralaFloods
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
