என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்
நாகர்கோவில்:
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 400-க்கு மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
புறநோயாளிகள் பிரிவு முன்பு இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தம் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் பெரும்பாலானோர் அவதிபட்டனர்.
ஆஸ்பத்திரிக்கு பிரசவம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். உள் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வழக்கம்போல் செயல்பட்டது. புறநோயாளிகள் கூட்டம் வழக்கம்போல் இருந்தது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவு எந்த ஒரு பாதிப்பும் இன்றி செயல்பட்டது. #IndianMedicalAssociation #Doctorsstrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்