search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூரில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    துறையூரில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

    திருச்சி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை -பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    துறையூர்: 

    திருச்சி மாவட்டம்  துறையூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் துறையூர் பெரிய கடைவீதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக ஜவுளிகள் எடுக்க திருச்சிக்கு நம்பிராஜன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். ஜவுளிகள் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினார்.

    வீட்டின் அருகே வந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து , கார் ஒன்றில் ஏறி தப்ப முயன்றனர். இதனைப்பார்த்த நம்பிராஜன் மற்றும் அவரது உறவினர்கள்  அதிர்ச்சியடைந்ததோடு, மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் காரை எடுத்து தப்பி சென்று விட்டனர். 

    இதையடுத்து நம்பிராஜன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும்  ரூ.35ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசில் நம்பிராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து   சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து கொள்ளையர்களை பிடிக்க  உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×