என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்ணன், கமல் மீது வழக்கு
Byமாலை மலர்24 May 2018 6:48 AM GMT (Updated: 24 May 2018 6:48 AM GMT)
தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துப்பாக்கி சூட்டை கண்டித்த தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையே தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துப்பாக்கி சூட்டை கண்டித்த தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையே தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X