என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்து பெண் உடல் கருகி பலி
Byமாலை மலர்19 May 2018 6:23 AM GMT (Updated: 19 May 2018 6:23 AM GMT)
திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்து சிதறியதில் பெண் உடல் கருகி பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை கமலா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். சிக்கன் கடை வைத்துள்ளார். அவரது மனைவி அருள்மேரி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இரவு அற்புத ராஜ் தனது மனைவி ஒரு மகன், மகளுடன் வீட்டில் தூங்கினார். இன்னொரு மகன் வெளியூர் சென்று விட்டார்.
இன்று காலை அருள்மேரி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சிதறின.
கண் இமைக்கும் நேரத்தில் அருள்மேரி உடலில் தீ பற்றியது. இதனால் அவர் அபயக்குரலிட்டார். சத்தம் கேட்டு இன்னொரு அறையில் இருந்த அற்புதராஜ் மகன் மரிய ஆல்வின் ஆகியோர் விரைந்து வந்து அருள்மேரியை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்குக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் கதறினர்.
சத்தம் கேட்டு ஊரில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அருள்மேரி சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீக்காயமடைந்த அற்புதராஜ், அவரது மகன் மரிய ஆல்வின் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை கமலா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். சிக்கன் கடை வைத்துள்ளார். அவரது மனைவி அருள்மேரி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இரவு அற்புத ராஜ் தனது மனைவி ஒரு மகன், மகளுடன் வீட்டில் தூங்கினார். இன்னொரு மகன் வெளியூர் சென்று விட்டார்.
இன்று காலை அருள்மேரி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சிதறின.
கண் இமைக்கும் நேரத்தில் அருள்மேரி உடலில் தீ பற்றியது. இதனால் அவர் அபயக்குரலிட்டார். சத்தம் கேட்டு இன்னொரு அறையில் இருந்த அற்புதராஜ் மகன் மரிய ஆல்வின் ஆகியோர் விரைந்து வந்து அருள்மேரியை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்குக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் கதறினர்.
சத்தம் கேட்டு ஊரில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அருள்மேரி சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீக்காயமடைந்த அற்புதராஜ், அவரது மகன் மரிய ஆல்வின் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X