என் மலர்

    செய்திகள்

    ஒரு தீர்ப்புக்கு வரவேற்பு மற்றொரு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - டிடிவி தினகரன்
    X

    ஒரு தீர்ப்புக்கு வரவேற்பு மற்றொரு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - டிடிவி தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரு வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேற்கண்ட இரு வழக்கிலும் சட்ட போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
    Next Story
    ×