என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடல் பகுதியில் 7 கிலோ தங்கம் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
Byமாலை மலர்26 Feb 2018 4:01 AM GMT (Updated: 26 Feb 2018 4:01 AM GMT)
இலங்கை கடல் பகுதியில் ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ தங்கத்தை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 2 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்பட்டி கந்தகுலியா கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த படகில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இருப்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் படகு முழுவதும் சோதனையிட்டனர்.
அப்போது 7 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல ராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்பட்டி கந்தகுலியா கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த படகில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இருப்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் படகு முழுவதும் சோதனையிட்டனர்.
அப்போது 7 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல ராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X