என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் வெற்றிடத்தை அன்புமணி நிரப்புவார்: ராமதாஸ் பேச்சு
    X

    அரசியல் வெற்றிடத்தை அன்புமணி நிரப்புவார்: ராமதாஸ் பேச்சு

    அரசியல் வெற்றிடத்தை அன்புமணி நிரப்புவார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    மாவட்ட துணைத் தலைவர் ஆ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைப்பொது செயலாளர் பொன்.கங்காதரன், மேற்கு மாவட்ட செயலாளர் வ.உமாபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    காஞ்சீபுரம் பெரிய தொகுதி. இந்த நகரத்தை மாநகராட்சியாக மாற்றினால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதனை தற்போதுள்ள அரசிடம் சொல்லி ஒருபயனும் இல்லை. தமிழகத்தில் உள்ள 5.96 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் உள்ளனர்.

    அதனால் நமது கொள்கைகளை வீடுவீடாக சென்று பெண்களிடம் எடுத்து கூறி அவர்களை பா.ம.க. விற்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும். இனி எந்த கூட்டமாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் தங்கள் மனைவியுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    அப்போது தான் பெண்களுக்கும் அரசியல் தெரியும். தமிழக அரசின் மீது பா.ம.க. கூறிய ஊழல் புகார்கள் தற்போது உண்மையாகி வருகிறது. தமிழக அரசின் 25 துறைகள் மீது தமிழக கவர்னரிடம் பா.ம.க. ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். அப்போது எங்கள் புகாரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் புகார் தெரிவித்த கணபதி ஊழல் வழக்கில் கைதாகியுள்ளார். இதன் மூலம் நாங்கள் கூறிய உண்மை வெளிவந்துள்ளது.

    ஊழல் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை ஏன் தகுதிநீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்ய வில்லை. ஊழல் புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதிக்கும் தற்போதய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நடவடிக்கை எடுக்கவில்லையா? உண்மை வெளிவர பா.ம.க. தொடர்ந்து போராடும்.

    தமிழகத்தில் தற்போது பெரிய அரசியல் தலைவர்கள் இல்லை. அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்புவதற்கு அன்புமணியை தவிர வேறு யாரும் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், புதுவை மாநில அமைப்புச் செயலாளர் கோ.தனராஜ் உள்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர். #tamilnews

    Next Story
    ×