என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை: அமைச்சர் கே.சி.வீரமணி
    X

    ஆர்.கே.நகர் மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை: அமைச்சர் கே.சி.வீரமணி

    ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்.கே.நகர் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் 6 மாதங்களுக்கு முன்பே பிரசாரம் செய்து மக்கள் மனதை மாற்றிவிட்டார்.

    தினகரன் ஒருமாயமான் அவரை நம்பி ஏமாற வேண்டாம் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் ஜெயலலிதாவின் கோட்டை அங்குள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

    திருப்பத்தூர் பாதாள சாக்கடை திட்டபணிகள், ஜோலார்பேட்டை மேம்பால பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏலகிரி மலையில் புதிய டிரான்ஸ்பாரம் அமைக்கப்படும், ஏலகிரி மலையில் தடுப்பனைகள் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×