என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
By
மாலை மலர்11 July 2017 4:57 AM GMT (Updated: 11 July 2017 4:58 AM GMT)

ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
மதுரை:
உலக அளவில் ஆட்கொல்லி வைரஸ் நோயான ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் இந்தியாவில் வருவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சுகாதார துறையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் பயணிகளை கண்காணித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்த மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆட்கொல்லி வைரஸ் நோயான ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் இந்தியாவில் வருவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சுகாதார துறையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் பயணிகளை கண்காணித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்த மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் மூலம் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
