என் மலர்
செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜவுளி நிறுவனத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்த்தனர்.
இதற்காக உண்ணாவிரதம், கலெக்டரிடம் மனு , ஊர்வலம் என பல்வேறு வகையில் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர். எனினும் ஜி.எஸ்.டி வரிஇந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதை கண்டித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன்(எக்மா) சார்பில் 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ரவிசந்திரன் தெரிவித்தார்.
அதன்படி நேற்று முதல் ஜவுளி கடைகள், அதன் சார்ந்த நிறுவனங்கள், விசைத்தறிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் குதித்தன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.
அதே போன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் விசைத்தறிகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன.
நேற்று ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் இருந்து மேட்டூர் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், மற்றும் அதன் சார்ந்து நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டிருந்தது.
இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் ரவிசந்திரன் கூறியதாவது.-
ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும் ஜி.எஸ்.டி.அமலுக்கு வந்து விட்டது.
இதை கண்டித்து 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்தோம். அதன்படி வேலை நிறுத்த போராட்டம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
இன்று 2-வது நாளாக எங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் நூற்றுக்கணக்கான ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஒன்று திரண்டு வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்.
எங்கள் போராட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் மாவட்டம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.30 வீதம் 6 நாட்களுக்கு சுமார் ரூ.180 வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜவுளி நிறுவனத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்த்தனர்.
இதற்காக உண்ணாவிரதம், கலெக்டரிடம் மனு , ஊர்வலம் என பல்வேறு வகையில் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர். எனினும் ஜி.எஸ்.டி வரிஇந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதை கண்டித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன்(எக்மா) சார்பில் 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ரவிசந்திரன் தெரிவித்தார்.
அதன்படி நேற்று முதல் ஜவுளி கடைகள், அதன் சார்ந்த நிறுவனங்கள், விசைத்தறிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் குதித்தன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.
அதே போன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் விசைத்தறிகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன.
நேற்று ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் இருந்து மேட்டூர் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், மற்றும் அதன் சார்ந்து நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டிருந்தது.
இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் ரவிசந்திரன் கூறியதாவது.-
ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும் ஜி.எஸ்.டி.அமலுக்கு வந்து விட்டது.
இதை கண்டித்து 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்தோம். அதன்படி வேலை நிறுத்த போராட்டம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
இன்று 2-வது நாளாக எங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் நூற்றுக்கணக்கான ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஒன்று திரண்டு வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்.
எங்கள் போராட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் மாவட்டம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.30 வீதம் 6 நாட்களுக்கு சுமார் ரூ.180 வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






