என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Byமாலை மலர்3 July 2017 9:18 AM GMT (Updated: 3 July 2017 9:18 AM GMT)
களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணைக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் தலையணையில் ஆனந்த குளியலிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வற்றியதால் கடந்த மே 1-ம் தேதி முதல் தலையணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் தலையணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணைக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தலையணைக்கும் வந்து சென்றதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனையொட்டி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் மேற்பார்வையில் களக்காடு வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் காட்சி.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் தலையணையில் ஆனந்த குளியலிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வற்றியதால் கடந்த மே 1-ம் தேதி முதல் தலையணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் தலையணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணைக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தலையணைக்கும் வந்து சென்றதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனையொட்டி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் மேற்பார்வையில் களக்காடு வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் காட்சி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X