என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
Byமாலை மலர்24 Jun 2017 7:53 AM GMT (Updated: 24 Jun 2017 7:53 AM GMT)
நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மீன்பிடித் தொழில் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் நாகை மீனவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
வேதாரண்யம்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.
நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் விசைப்படகில் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது பற்றி இன்று காலை தெரியவந்ததும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலோர காவல் படை போலீசாரை சந்தித்து சிறை பிடிக்கப்பட்ட 8 பேரையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மீன்பிடித் தொழில் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதால் நாகை மீனவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நாகை மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர்.
ஏற்கனவே தமிழக மீனவர்களின் பல விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றி வைத்துள்ளது. மீனவர்களை விடுவித்த போதிலும் விசைப்படகுகளை வழங்க மறுத்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கை கடற்படைக்கு அஞ்சும் நிலையில் மீன்பிடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், மீன்களை பறித்து செல்லுதல், மீனவர்களை சுட்டுக் கொல்லுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் சீற்றங்களிலும் மீனவர்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.
நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் விசைப்படகில் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது பற்றி இன்று காலை தெரியவந்ததும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலோர காவல் படை போலீசாரை சந்தித்து சிறை பிடிக்கப்பட்ட 8 பேரையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மீன்பிடித் தொழில் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதால் நாகை மீனவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நாகை மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர்.
ஏற்கனவே தமிழக மீனவர்களின் பல விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றி வைத்துள்ளது. மீனவர்களை விடுவித்த போதிலும் விசைப்படகுகளை வழங்க மறுத்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கை கடற்படைக்கு அஞ்சும் நிலையில் மீன்பிடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், மீன்களை பறித்து செல்லுதல், மீனவர்களை சுட்டுக் கொல்லுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் சீற்றங்களிலும் மீனவர்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X