என் மலர்
செய்திகள்

தையூர் இளவந்தாங்கலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்: திருமாவளவன் பேசுகிறார்
கேளம்பாக்கம் அருகே தையூர் இளவந்தாங்கல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருமாவளவன் பேசுகிறார்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே தையூர் இளவந்தாங்கல் பகுதியில் காஞ்சி கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர் சூ.ர. ராஜ்குமார் தலைமை தாங்குகிறார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ப.விடுதலைநெஞ்சன் வரவேற்று பேசுகிறார். இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
சூ.க. விடுதலை செழியன், சிறுத்தை வி. கிட்டு. பாசறை, அ. செல்வராஜ் மற்றும், மாவட்ட, ஒன்றிய , நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மற்றும் திருப்போரூர் நகரம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கபடுகிறது.
Next Story






