என் மலர்
டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, கெனின் காலிறுதிக்கு தகுதி
- 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
- சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-4, 6-0 என இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.
மேலும், 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்ற ரஷிய வீராங்கனை ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஷ்விடெக் உடன் மோதுகிறார்.
Next Story






