என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால்.. ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி
- விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.
- நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.
இந்நிலையில் லண்டனில் யுவ்ராஜ் சிங்கின் Youwecan ட்ரஸ்ட் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கோலி "நீங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்" எனக் கூறியுள்ளார்.
Next Story






