என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு..!
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோலி பிசிசிஐ-க்கு தகவல்.
- இங்கிலாந்து தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக தகவல்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான இவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது.
ரோகித் சர்மா கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து தொடருக்கு எதிராக விராட் கோலியின் இந்த முடிவு பிசிசிஐ-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யும்படி பிசிசிஐ, விராட் கோலியுடன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஒருவேளை ஓய்வு முடிவில் விராட் கோலி உறுதியாக இருந்தால் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடும்படி பிசிசிஐ வற்புறத்தலாம்.
எப்படி இருந்தாலும் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கிறது.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்தது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.