என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19 சாம்பியன்: எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை- ஆட்ட நாயகன் சூர்யவன்ஷி
    X

    U19 சாம்பியன்: எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை- ஆட்ட நாயகன் சூர்யவன்ஷி

    • ஆட்ட நாயகன் விருதை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
    • எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 பந்துகளில் 175 ரன் குவித்து சாதனை படைத்தார். இதில் 15 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடங்கும்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யவன்ஷி கூறியதாவது:-

    எனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்தப் போட்டிக்காக நான் கடந்த 8 மாதங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டேன்.

    ஆட்ட நாயகன் விருதை என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப்போட்டியில் எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை. மற்ற ஆட்டத்தை போலவே இறுதிப்போட்டியை நினைத்தோம். எனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×