என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி டிராபி: அரையிறுதிக்கு முன்னேறியது ஜம்மு- காஷ்மீர்
    X

    ரஞ்சி டிராபி: அரையிறுதிக்கு முன்னேறியது ஜம்மு- காஷ்மீர்

    • 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றது.
    • ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ரஞ்சி டிராபி தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஜம்மு- காஷ்மீர் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சுபம் கஜூரியா 60 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் குல்தீப் சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய மத்திய பிரதேசம் 152 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக யாஷ் துபே 58 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    38 ரன்கள் முன்னிலையில் அணி 2-வது இன்னிங்சில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வன்ஷஜ் ஷர்மா 54 ரன்கள் எடுத்தார். இதனால் மத்திய பிரதேசம் அணிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கடினமான இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம் அணி 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சரன்ஷ் ஜெயின் 64 ரன்கள் எடுத்தார். காஷ்மீர் தரப்பில் அகீப் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    Next Story
    ×