என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கைகுலுக்க மறுப்பு: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புகார்
- வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர்.
- கைகுலுக்காமல் இருப்பது குறித்து இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 127 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக டாஸ் போடும் போதும் கை குலுக்கல் நடைபெறவில்லை. இதே போல இந்திய வீரர்கள் அறையும் மூடப்பட்டது.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறும் போது, 'நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம். நாங்கள் அவர்களுக்கு பதில் அளித்தோம். சில விஷயங்கள் விளையாட்டு திறனுக்கு அப்பாற்பட்டது' என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறும் போது, 'நாங்கள் கைகுலுக்க விரும்பினோம். ஆனால் எதிர் அணி வீரர்கள் அதை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தோம். எங்களது ஆட்டத்திலும் ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் கைகுலுக்க விரும்பினோம்' என்றார். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவை பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார்.
இதற்கிடையே கை குலுக்காதது தொடர்பாக இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. இதற்கிடையே கைகுலுக்காமல் இருப்பது குறித்து இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்தது.






