என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த முன்னாள் இந்திய வீரர்
    X

    அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த முன்னாள் இந்திய வீரர்

    • அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

    சென்னை:

    இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் மோகித் சர்மா விளையாடியுள்ளார்.

    ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா,

    இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×