என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: சுனில் நரைன் சாதனையை சமன் செய்த சாஹல்
- ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின.
- பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசண்டிகர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 95 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யசுவேந்திர சாஹல். அவர் 4 ஓவர் வீசி 28 ரன் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சாஹல் 8-வது முறையாக 4 விக்கெட்டை தொட்டுள்ளார். இதன் மூலம் அவர் சுனில் நரைன் சாதனையை சமன் செய்தார். சுனில் நரைன் 8 தடவை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக மலிங்கா 7 தடவையும், ரபடா 6 முறையும் 4 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை புரிந்தார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக 36 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 35 விக்கெட் (பஞ்சாப்புக்கு எதிராக) வீழ்த்தி இருந்தார்.






