என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும்- தேவ்தத் படிக்கல்
- நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன்.
- ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
அந்த அவர்களின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேயத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் வெளி மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும் என ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன். டி20-ல் கடந்த இரு ஆண்டுகளாக நான் |சிறப்பாக விளையாடவில்லை, அதற்கு நானே முழுப் பொறுப்பு. அணியாக நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம். சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும். அதற்கு நாங்கள் மிகவும் தகுதியானவர்கள்.
என்று தேவ்தத் படிக்கல் கூறினார்.






