என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    PBKS vs RCB: Qualifier 1-ல் வெற்றி யாருக்கு? அஸ்வின் கணிப்பு
    X

    PBKS vs RCB: Qualifier 1-ல் வெற்றி யாருக்கு? அஸ்வின் கணிப்பு

    • குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகிறது.
    • குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த அஸ்வின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறம் குவாலிபயர் 1 போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்சிபி அணியில் மாயங்க் அகர்வாலின் பங்களிப்பு பற்றி பேச மறுக்கக்கூடாது. ஏனெனில் அவர் இந்த ஆண்டு சிறந்த உள்நாட்டு சீசனை வைத்திருந்தார். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் பேசினேன். ஆனால் பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தற்போது அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

    இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயரின் சீசனாக இல்லாமல் போனால் ஆர்.சி.பி அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணி வலிமையான அணியாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி தான் முதல் அணியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

    என அஸ்வின் கூறினார்.

    Next Story
    ×