என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிராக பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு
- வெற்றிபெறும் அணி முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும்.
- பஞ்சாப் 17 புள்ளிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளிலும் உள்ளன.
ஐபிஎல் 2025 சீசனில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல 2 இடங்களுக்குள் செல்லும்.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:-
ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், சான்ட்னெர், தீபக் சாஹர், பும்ரா, போல்ட்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:-
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், கைல் ஜாமின்சன், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக்.
Next Story






