என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    X

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    • மார்கிராம் 6 ரன்னிலும், பூரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நூர் அகமது 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

    லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ்- ரிஷப் பண்ட் ஜோடி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முயன்றனர். இருந்தாலும் ஜடேஜா வீசிய 10ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். 12.1 ஓவரில் லக்னோ அணி 100 ரன்னைத் தொட்டது. ஜடேஜா வீசிய 14ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    16ஆவது ஓவரில் லக்னோவிற்கு 9 ரன்கள் கிடைத்தது. 17வது ஓவரை நூர் வீசினார். இந்த ஓவரில் லக்னோ 3 ரன்கள் மட்டுமே அடித்தது. 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தையும், 3ஆவதை பந்தையும் சிக்கருக்கு தூக்கினார். அத்துடன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 18 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 139 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் 2 சிக்சருடன் 16 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை பதிரனா வீசினார். 2ஆவது பந்தை பதிரானா வைடாக வீசினார். இதில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது அப்துல் சமாத் ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். பண்ட் 49 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது.

    சிஎஸ்கே அணி சார்பில் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கலீல் அகமது மற்றும் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×