என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

VIDEO: நடுவருடன் வாக்குவாதம் செய்த சுப்மன் கில் - சமாதானப்படுத்த முயன்ற அபிஷேக் சர்மா
- அரை சதமடித்த சுப்மன் கில் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார்
- தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக களத்திற்கு வெளியே நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியின் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஐதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அபிஷேக் சர்மாவின் காலில் பந்து பட்டதற்கு LBW முறையில் குஜராத் அணி அவுட் கேட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் கடுப்பான சுப்மன் கில் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அபிஷேக் சர்மா அவரை சமாதானப்படுத்த முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் போட்டியில் அறத்துடன் விளையாடினாள் நடுவர்கள் PAIR PLAY புள்ளிகள் வழங்குவார்கள். ஏற்கனவே PAIR PLAY பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் அணி சுப்மன் கில்லின் வாக்குவததால் மேலும் PAIR PLAY புள்ளிகளை இழக்கும் என்று கூறப்படுகிறது.