என் மலர்
நீங்கள் தேடியது "GTvSRH"
- அரை சதமடித்த சுப்மன் கில் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார்
- தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக களத்திற்கு வெளியே நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியின் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஐதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அபிஷேக் சர்மாவின் காலில் பந்து பட்டதற்கு LBW முறையில் குஜராத் அணி அவுட் கேட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் கடுப்பான சுப்மன் கில் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அபிஷேக் சர்மா அவரை சமாதானப்படுத்த முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் போட்டியில் அறத்துடன் விளையாடினாள் நடுவர்கள் PAIR PLAY புள்ளிகள் வழங்குவார்கள். ஏற்கனவே PAIR PLAY பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் அணி சுப்மன் கில்லின் வாக்குவததால் மேலும் PAIR PLAY புள்ளிகளை இழக்கும் என்று கூறப்படுகிறது.
- டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.
ஐதராபாத் சார்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
- முதலில் ஆடிய குஜராத் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களை குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார்.
8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ரன்னில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.
குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.






