என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Live Updates
- 24 Nov 2024 4:25 PM IST
ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- 24 Nov 2024 4:17 PM IST
ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்..
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
- 24 Nov 2024 4:02 PM IST

தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடாவை ரூ. 10.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
- 24 Nov 2024 3:57 PM IST
அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையில் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- 24 Nov 2024 3:10 PM IST
2025 ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகையின் விவரம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.55 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ.45 கோடி
லக்னோ - ரூ.69 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.69 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.110.5 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.51 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.41 கோடி
ஆர்சிபி - ரூ.83 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.73 கோடி














