என் மலர்
கிரிக்கெட் (Cricket)
விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
Live Updates
- 25 Nov 2024 6:05 PM IST
ஆர்டிஎம் முறையில் ஸ்வப்னில் சிங்-ஐ ரூ. 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி. அணி
- 25 Nov 2024 6:02 PM IST
தர்ஷன் நலகண்டேவை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
- 25 Nov 2024 5:58 PM IST
ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட அன்ஷூல் கம்போஜ் சி.எஸ்.கே. அணியால் ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
Next Story














