என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டி20 போட்டி: 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    முதல் டி20 போட்டி: 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.
    • அபிஷேக் சர்மா 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.

    நாக்பூர்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ரிங்கு சிங் 20 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் தனி ஆளாகப் போராடி 40 பந்தில் 78 ரன்கள் குவித்தார். மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ்-சாப்மேன் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    Next Story
    ×