என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பிரதிகா காயம்: இந்திய அணிக்கு புதிய ஓபனர்- மிதாலி ராஜ் யோசனை
- இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
- ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை:
மகளிர் உலகக்கோப்பை தொடரில் நேற்று அரங்கேறிய 28-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு தொடரில் பாதியில் ரத்தான 6-வது ஆட்டம் இதுவாகும்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பீல்டிங்கின்போது இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், பிரதிகா ராவல் காயம் காரணமாக விளையாட முடியாவிட்டால், ஹர்லீன் டியோல் ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரதிகா சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






