என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை இந்தியா பி அணியே வீழ்த்தி விடும்.. முன்னாள் வீரர் கருத்து
- இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும்.
- 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகிறது.
இந்த தொடரில் நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய பி அணி, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவுக்கு திறன் கொண்டது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும். ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர். இப்போது அவர்களை விட நாம் மிகச் சிறந்த அணியாக இருக்கிறோம்.
இவ்வாறு அதுல் வாசன் கூறினார்.
Next Story






