என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    • ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை.
    • பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    Next Story
    ×