என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி. விருது பரிந்துரை பட்டியலில் கேசவ் மகாராஜ், அலிசா ஹீலி
Byமாலை மலர்3 May 2022 11:26 AM GMT (Updated: 3 May 2022 11:26 AM GMT)
சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர்களின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர் ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.
இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து தலா ஒருவர் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருது பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர், மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா ஆகியோர் இடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X