search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி, கங்குலி
    X
    விராட் கோலி, கங்குலி

    உண்மையை சொல்வது யார்? விராட் கோலி- கங்குலி மோதல்

    கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். கோலியிடம் இருந்த 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார்.

    விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகினார். அதே நேரத்தில் ஒருநாள் போட் டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

    காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகினார். அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் விராட் கோலி ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. இதனால் இருவருக்கும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றும், ரோகித் சர்மாவுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று முடிவை தெரிவித்தபோது, கிரிக்கெட் வாரியம் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்ல முறையில் ஏற்றுக்கொண்டனர். வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவும் இல்லை. தயக்கம் காட்டவும் இல்லை. ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கினார்கள் என்றார்.

    ஆனால் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியது குறித்து கங்குலி கூறும்போது, கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து அவரிடம் பேசி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் கோலி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    கங்குலி தெரிவித்த கருத்துக்கும் தற்போது கோலி கூறியதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. இதில் உண்மையை சொல்வது யார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
    Next Story
    ×