search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியம்சன் - விராட் கோலி
    X
    வில்லியம்சன் - விராட் கோலி

    இந்தியா-நியூசிலாந்து மோதல்: உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கான விதிமுறைகள் அடுத்தவாரம் அறிவிப்பு

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி பாதிக்கப்படும் போது மாற்றுநாள் ஆட்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    துபாய்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 18-ந்தேதி சவுத்தம்டனில் தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 17-ந்தேதிவரை நடக்கிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இதுவரை விதிமுறைகளை அறிவிக்கவில்லை.

    இந்த போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுமா அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் அதுகுறித்தான விதிமுறைகள்? என்பது குறித்து ஐ.சி.சி. இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆட்ட விதிமுறைகளை ஐ.சி.சி. விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். ஆனால் தேதியை உறுதியாக கூறமுடியாது. அப்படி அறிவிக்கும்பட்சத்தில் போட்டிக்கான தெளிவான முடிவுக்கு வர முடியும்.

    இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதி முறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த வாரம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் போட்டி பாதிக்கப்படும் போது மாற்றுநாள் ஆட்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    5 நாட்களுக்கும் சேர்த்து எத்தனை மணிநேரம் போட்டியை நடத்துவது என்பது குறித்தும் இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்படும்.

    ஐ.சி.சி.யின் கூட்டம் வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதோடு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்தும் விவாதிக்கப்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×