என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணி தொடரை 0-4 என்ற கணக்கில் இழக்கும் - மைக்கேல் வாகன் கணிப்பு
Byமாலை மலர்14 Dec 2020 7:13 AM GMT (Updated: 14 Dec 2020 7:13 AM GMT)
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் இழக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு சூறாவளிகள் ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை அதுவும் கூக்கபுரா புதிய பந்தில் சமாளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் எத்தகைய வலுமிக்க பவுலர்கள் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டி விடுவார்கள். இந்த டெஸ்ட் தொடரில், முதலில் நடக்க உள்ள பகல்-இரவு இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) டெஸ்ட் முக்கியமானது. அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒரு போதும் தோற்றது கிடையாது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அதன் பிறகு விராட் கோலி இல்லாத இந்திய அணி எஞ்சிய மூன்று டெஸ்டுகளிலும் தோற்று தொடரை 0-4 என்ற கணக்கில் இழக்க நேரிடும்.
காயத்தால் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதலாவது டெஸ்டில் ஆடாதது இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகும். புகோவ்ஸ்கி காயத்தால் விலகி விட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் யார் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்பதில் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது. ஆனாலும் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட் நல்ல நிலையில் உள்ளனர். அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை எதிர்கொண்டு எந்த அணியும் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன் குவித்ததில்லை. அதனால் தான் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று சொல்கிறேன்.
இவ்வாறு வாகன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X