search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    மும்பை இந்தியன்ஸ் அணியை மிரட்டும் அளவிற்கு கேகேஆர்-க்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை- சச்சின்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 196 ரன்களை சேஸிங் செய்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 80 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் விளாசினர்.

    196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியால் 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 49 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ரஸல், மோர்கன், நிதிஷ் ராணா என தலைசிறந்த வீரர்கள் இருந்த போதிலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் போனது.

    இந்நிலையில் மிரட்டலான பார்ட்னர்ஷிப் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ராகுல் சாஹர், பொல்லார்ட் சப்போர்ட் சிறப்பாக இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டும் வகையிலான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதை பார்க்க முடியவில்லை’’ என்றார்.
    Next Story
    ×